அதிவேக ரயிலில்
பெட்டிகள் கடந்து
பேனாக்கள் விற்கிற
கண்தெரியா பெரியவரை விடவா
சிரமப்பட்டிருப்போம் நாம்?
தன்னிலும் உயரமாய்
வளர்ந்து நிற்கும்
மனவளர்ச்சியற்ற
மகனை மூச்சடக்கி
தூக்கிச் செல்லும்
தாயினும் பெரிதா
நம் சுமைகள்?
நம்பி வாழலாம்
முடியாது போனால்
குறை ஒன்றும் இல்லை
நம்பியே கூட சாகலாம்..
No comments:
Post a Comment