Wednesday 24 February 2016

முற்றுப் பெறாத சூதாட்டம்..


எதிரெதிர் அமர்ந்து சூதாடினோம்
நானும் கடவுளும்.

உருண்ட பகடைகளின்
ரகசிய வாய்களில்
விழுங்கப்பட்டது
பால்யம், இளமை
கனவு, இலட்சியம் என
என் எல்லா கையிருப்பும்.


தோற்று எழுந்த என்னை
தடுத்து அமர்த்தி
’உன்னுள்ளே இருக்கும்
அந்தக் கவிதையை பணயம்வை’
என்றார்.

ஆட்டம் முடிந்தபாடில்லை
பாவம் கடவுள்.

No comments:

Post a Comment